Thursday, May 28, 2009

சொந்தம்

ஆறடி நிலமே சொந்தம்
புதைக்கப்படுபவனுக்கு

அதுகூட சொந்தமில்லை
எரிக்கப்படுபவனுக்கு...!

கானல் நீர்

தொடுவானம் தொடத் துடிக்கும்
குழந்தைபோல்
உன்னைத்தேடி நான்.... கானல் நீர்

நிலவு

அதிகாலை காலையாக மாறத்
துடித்துக் கொண்டிருக்கிறது
கதிரவன் தன் ஒளிக்கதிர்களை
நீட்டி தன் வரவை வெளிப்படுத்தி
கொண்டிருகிறான்....

அதுவரை ஆட்சி செய்து
கொண்டிருந்த நிலவு மகள் தன்னுள்
மயங்க யாருமில்லததால்
காற்றிலே கரைகிறாள்
மனவருத்தத்துடன்
என்னைபோல்.....

ஹைக்கூ

புல்லுக்கும் வியர்க்குமோ
புல்லின் நுனியில்
நீர்த்துழிகள்...!