காராபூந்தியில்
தேடித் தேடி பொறுக்கும்
வேர்க்கடலை
அவள் !!!
கொஞ்சமாய்
தூற வேண்டும்...
கொஞ்சமே கொஞ்சமாய்
நனைய வேண்டும்...
மீதத்தை
நாம் நம்முள்
நனைந்துகொள்வோம்
அன்பென்னும் மழையில்...
நனைகிறாள் அவள்
மழையில்..
அவளால் நனைந்து
கரைகிறேன்
நான் என்னுள்..
போதும் எனக்கு
என்றது கோழி
போதாது என்று
மீண்டும் வைத்தாள்
அதன் தோழி..
உடைந்து போன
நீர்க்குமிழிகளாய்
சிதறிப்போன
கனவுகள்,
உன்னுடன் வாழ
விரும்பியவை.
Atom Feed (xml)