Friday, May 10, 2013

மழை

மழை பெரிதாய்
பெய்துக்கொண்டிருக்கிறது...

கதவை தாளிட்டுக்கொண்டு
உள்ளே ஜன்னல் வழிய
மழையை ரசித்துக்கொண்டிருக்கிறாய்....

நன்றாக நனைந்த நான்
வெளியில் நின்று
கையசைக்கின்றேன்...
பார்த்துக்கொண்டே
நிற்கிறாய்....

உன் பெயர் சொல்லி
அழைக்கின்றேன்...

"போடா... உனக்கு வேறு வேலையே
இல்லை... கதவைத் திறந்தால்
மறைந்து போகிறாய்..
இத்தோடு பதினான்காம் முறை"
என்று செல்லமாய்
சிணுங்கினாய்...

நீ மழையை
ரசித்துக்கொண்டிருக்கிறாய்...
நான் உன்னை....

மழை நின்றுவிட்டது ..
இப்போது தான்
கவனிக்கின்றாய்
நான் நிற்ப்பதை...

"லூசாடா நீ" என்ற
திட்டிக்கொண்டே
சேலைத் தலைப்பால்
தலையை துவட்ட
ஆரம்பித்தாய் ...

நான் நனைய
ஆரம்பித்தேன்...

Monday, May 6, 2013

தேடல்

தேடல் தான்
வாழ்க்கை என்று
புரிந்துகொண்டேன்
உன்னைத் தேட
தொடங்கியதிலிருந்து.....

Friday, May 3, 2013

குளிர்

"உங்க ஊர்ல கூட வெயில் 
ரொம்ப அடிக்குதாமே " என்று கேட்டாள்.

"ஆமா... நீ இல்லாததால அதுக்கு
குளிர் விட்டுப்போச்சு" என்றேன்...

எனக்கு மட்டுமான ஒரு குளிர் பிரதேசத்தை
ஒற்றைப் பார்வையில் வீசிச்சென்றாள்.