Friday, September 28, 2012

நீ எங்கேயோ இருக்கிறாய்

எட்டிப்பார்த்து
இம்சிக்கிறாய்

திரும்பிப்பார்த்து
தவிக்கவிடுகிறாய்

கடந்துசென்று
கொல்கிறாய்

சிறு புன்னைகையில்
சிதறடிக்கிறாய்

கண் அசைவில்
கலவரம் செய்கின்றாய்

இவ்வனைத்தையும்
எங்கிருந்தோ செய்யும்
வித்தையை
எங்கிருந்து கற்றாய்...

நீ எங்கேயோ
இருக்கிறாய்..

Wednesday, September 26, 2012

வாழ்க்கை

சொந்த ஊருக்கு செல்வதிலேயும்
சென்று வந்தபின்
திரும்ப செல்லும் நாட்களை
கணக்கிடுவதிலேயும்
கழிந்துவிடுகின்றன
வாழ்க்கை...!!!

ஆனாலும்
பேருந்தோ புகைவண்டியோ
பிடிக்க ஓடும் தருணங்களிலும்
திரும்பும் வேளையிலும்
தொண்டையில் ஏற்படும்
சொல்ல முடியாத சோகத்திலும்
கண்ணோரம் வழியும் கண்ணீரிலும்
உணர்கிறேன் வாழ்க்கையின்
ஆனந்தங்களை....!!!

Thursday, September 20, 2012

நினைவுகள்

நண்பன் வந்து
தோளைத் தட்டியே பின்பே
தெரிகிறது...
நான் பேசிக்கொண்டிருப்பது
உன்னுடன் அல்ல
உன் நினைவுகளுடன் என்று...