Friday, December 31, 2010

புத்தாண்டு

இதோ எல்லோரும்
கிளம்பிவிட்டார்கள்
புத்தாண்டை கொண்டாட...
நான் மட்டும் காத்திருக்கிறேன்
உனக்காக...
அது எத்தனை ஆண்டுகள்
கழித்தே ஆயினும்....!!!

அலறல்

அடுத்த பெண்ணை
பார்க்கையில்
அய்யய்யோ என்று
அடிமனம் அலறுதடி...
எங்கேயோ
நீ என்னைத் திட்டுகிறாய்
என்று புலம்புதடி...!!!

Friday, December 24, 2010

கூலி

கரும்பு தின்ன கூலியா...???
ஆம்!
என் காதலை ரசிக்க
உனக்கு என் கவிதை...!!!

Wednesday, December 22, 2010

பரிசு

உனக்காக நான் தாஜ்மஹால்
தர விரும்பவில்லை
அது இறந்த காதலின் அடையாளம்..!!!
என் இதயத்தைத் தருகிறேன்
இது உண்மையான அன்பின் உருவாக்கம்...!!!

Tuesday, December 14, 2010

கேள்வி - பதில்

ஏன் கவிதை எழுதுகிறேன்
என்ற கேள்விக்கு
பதிலைத் தேடினால்
அதுவும் ஒரு கவிதையாய் நின்றது...
அது உன் பெயரே என்றது...!!!

Monday, December 13, 2010

காதல்

திருமணம் ஆன புதிதில்
உன் மீது நான் வைத்திருக்கும்
அன்பை எண்ணிப் பெருமிதம் கொள்வாய்...

ஆனால் இது எத்தனை நாள் நீடிக்கும்
என்று கவலைப்படுவாய்...

அடி பெண்ணே....!!!!
உனக்கு எப்படி புரிய வைப்பேன்????

கொடுத்தவுடன் நிறைந்து விட
இது காமம் இல்லையடி காதல் என்று...

Thursday, December 9, 2010

தருணம்

ஓர் ஆண்
வாழ்வினில்
மிகச்சிறந்த தருணம்...
அவன் தோள் சாய்ந்து
ஒரு தேவதை
உறங்கும் நேரம்.....

Monday, December 6, 2010

முதல் பேச்சு

நீ யார் என தெரிந்த உடன்
உனைப் பார்க்கும்
ஆசையை விட
உன்னைத் திட்டும்
எண்ணம் தான்
அதிகமாக உள்ளது...
இத்தனை நாள் எங்கே இருந்தாய்???

Sunday, December 5, 2010

பிச்சைக்காரர்கள்

எங்கள் ஊரில்
காசு இல்லாததால்
பிச்சைக்காரர்களாக
இருகிறார்கள் சிலர்...

இங்கே...
காசு இருந்தும்
பிச்சைக்காரர்களாக
இருகிறார்கள் பலர்...

ஆடை விஷயத்தில்...