Friday, December 31, 2010

புத்தாண்டு

இதோ எல்லோரும்
கிளம்பிவிட்டார்கள்
புத்தாண்டை கொண்டாட...
நான் மட்டும் காத்திருக்கிறேன்
உனக்காக...
அது எத்தனை ஆண்டுகள்
கழித்தே ஆயினும்....!!!

அலறல்

அடுத்த பெண்ணை
பார்க்கையில்
அய்யய்யோ என்று
அடிமனம் அலறுதடி...
எங்கேயோ
நீ என்னைத் திட்டுகிறாய்
என்று புலம்புதடி...!!!

Friday, December 24, 2010

கூலி

கரும்பு தின்ன கூலியா...???
ஆம்!
என் காதலை ரசிக்க
உனக்கு என் கவிதை...!!!

Wednesday, December 22, 2010

பரிசு

உனக்காக நான் தாஜ்மஹால்
தர விரும்பவில்லை
அது இறந்த காதலின் அடையாளம்..!!!
என் இதயத்தைத் தருகிறேன்
இது உண்மையான அன்பின் உருவாக்கம்...!!!

Tuesday, December 14, 2010

கேள்வி - பதில்

ஏன் கவிதை எழுதுகிறேன்
என்ற கேள்விக்கு
பதிலைத் தேடினால்
அதுவும் ஒரு கவிதையாய் நின்றது...
அது உன் பெயரே என்றது...!!!

Monday, December 13, 2010

காதல்

திருமணம் ஆன புதிதில்
உன் மீது நான் வைத்திருக்கும்
அன்பை எண்ணிப் பெருமிதம் கொள்வாய்...

ஆனால் இது எத்தனை நாள் நீடிக்கும்
என்று கவலைப்படுவாய்...

அடி பெண்ணே....!!!!
உனக்கு எப்படி புரிய வைப்பேன்????

கொடுத்தவுடன் நிறைந்து விட
இது காமம் இல்லையடி காதல் என்று...

Thursday, December 9, 2010

தருணம்

ஓர் ஆண்
வாழ்வினில்
மிகச்சிறந்த தருணம்...
அவன் தோள் சாய்ந்து
ஒரு தேவதை
உறங்கும் நேரம்.....

Monday, December 6, 2010

முதல் பேச்சு

நீ யார் என தெரிந்த உடன்
உனைப் பார்க்கும்
ஆசையை விட
உன்னைத் திட்டும்
எண்ணம் தான்
அதிகமாக உள்ளது...
இத்தனை நாள் எங்கே இருந்தாய்???

Sunday, December 5, 2010

பிச்சைக்காரர்கள்

எங்கள் ஊரில்
காசு இல்லாததால்
பிச்சைக்காரர்களாக
இருகிறார்கள் சிலர்...

இங்கே...
காசு இருந்தும்
பிச்சைக்காரர்களாக
இருகிறார்கள் பலர்...

ஆடை விஷயத்தில்...

Monday, November 22, 2010

அழகு


அவள் அழகாக இருக்கிறாளா
என்று தெரியாது..
ஆனால் அவள் அழகாகத்
தெரிகிறாள்..
உணர்கிறேன் அவள் தொடுதலில்...

Thursday, September 2, 2010

என் மனம்

நேற்று வரை உன்னிடம்
இருந்த என் மனதை
இன்று தெருவில் எறிந்தாய்...

பந்து விளையாடும் குழந்தை போல
கை கொட்டிச் சிரிக்கிறாய்
உன்னிடம் இருந்த காரணத்தினால்
அதுவும் சிரிக்கிறது
என்னைப் பார்த்து...

உள்ளுக்குள் அழுதுகொண்டே
என்னைப்போல...!!!

Wednesday, July 14, 2010

பார்வை

நான் எப்பொழுதும்
தாமதமாகவே
வருகிறேன்...
நான் நுழையும்போது
என்னை நீ நிமிர்ந்து
பார்க்கிறாய் என்பதால்....!!!

Tuesday, July 6, 2010

உனக்காக

பிறப்பென்றால்
முன் பிறப்பேன்...

இறப்பென்றால்
பின் இறப்பேன்...

இடையில்
காத்திருப்பேன்
உன்னைக் காத்து இருக்க...

Friday, July 2, 2010

காத்திருக்கிறேன்

நான் உன்னை
காதலிக்கிறேன்
என்கிறார்கள்

அவர்களுக்கு
எப்படித் தெரியும்
நான்தான் உன்னோடு
வாழ்ந்து கொண்டிருகிறேனே
நீ இல்லாமலே...

இந்த வாழ்வை
முழுமையைக்க
காத்திருக்கிறேன்
உனக்காக...

Wednesday, June 30, 2010

வரம்

மழலை வரம்
கேட்கும்
மடந்தை போல
உன்னைக் காணும்
வரம் கேட்கிறேன்
நான்....

பெண்

பெண்கள் எப்பொழுதும்
அழகுதான்..
ஏன் என்றால்
பொய் எப்பொழுதும்
அழகாகத்தான் இருக்கும்...

Tuesday, June 29, 2010

கண்ணீர்

என் வாழ்வில்
நீ அறிமுகம் ஆகும் பொழுது
உன்னை வரவேற்ற துளிகள்
நீ போகும்
இந்நேரம் மட்டும்
ஏன் வழியனுப்ப
மறுக்கின்றன?????

குழப்பம்

ஒவ்வொரு நொடியும்
பிறக்கின்றோம்...
ஒவ்வொரு நொடியும்
இறக்கின்றோம்...
நீ எனை கடக்கும்
இந்த நொடி
பிறப்பா இறப்பா
தெரியவில்லை...!!!

Saturday, June 12, 2010

இடம்

பார்க்கும் பார்வையும்,
பளிச்சிடும் சிரிப்பும்
அர்த்தம் நூறு தந்தால்
பேசுவதற்கு இடம் எங்கே???

Tuesday, June 8, 2010

வலி

நீ தரும்
வலிகளை விட
நீ பெரும்
வலிகளே
என்னை
வலிக்கச்செய்கின்றன...
என்னை
அழச்செய்கின்றன...

Sunday, March 21, 2010

தொடுவானம்

காத்திருந்து காத்திருந்து
வழித்தடங்கள் மாறி செல்லும்
பயணி அல்ல...

எதை கொடுத்தாலும்
சமாதனம் அடையும்
அழும் குழந்தை அல்ல...

வான் மழை வேண்டி நின்று
வாய்க்கால் நீரை
ஏற்றுக் கொள்ளும்
வயல் அல்ல...

தேடும் போது கிடைக்காத
சொற்களை தவிர்த்து
செல்லும் கவிஞன் அல்ல...

தொடுகிறாய் என்ற நினைவில்
தொடுவாய் என்ற கனவில்
தொடாமல் தொட்டு வாழும்
தொடுவானம் நான்...

Tuesday, March 9, 2010

எதிர்பார்ப்பு

ஒரு ரூபாய் நாணயத்தை
உண்டியலில் போட்டு விட்டு
ஓராயிரம் வரம் கேட்கும்...
மனிதன் மனம்.