Wednesday, September 2, 2020

கடலை

 காராபூந்தியில்

தேடித் தேடி பொறுக்கும்

வேர்க்கடலை

அவள் !!! 

மழை

 கொஞ்சமாய் 

தூற வேண்டும்...

கொஞ்சமே கொஞ்சமாய்

நனைய வேண்டும்...

மீதத்தை

நாம் நம்முள்

நனைந்துகொள்வோம்

அன்பென்னும் மழையில்...

நனை

 


நனைகிறாள் அவள் 

மழையில்..

அவளால் நனைந்து 

கரைகிறேன் 

நான் என்னுள்..


கோழி

 போதும் எனக்கு 

என்றது கோழி

போதாது என்று 

மீண்டும் வைத்தாள்

அதன் தோழி..



நீர்க்குமிழி

 உடைந்து போன 

நீர்க்குமிழிகளாய்

சிதறிப்போன

கனவுகள்,

உன்னுடன் வாழ 

விரும்பியவை.