Thursday, September 3, 2009

தமிழன்

வந்தோரை வாழ வைக்கும்
தமிழனுக்கு
தான் வாழ வழியில்லை.

விருந்தோம்பலை உயர்வாய்
நினைத்தவனுக்கு
மருந்துக்கு கூட உணவில்லை.

தன்மானத் தமிழனுக்கு
தன் மானமும் தெரியவில்லை
தமிழ் மானமும் தெரியவில்லை.

அள்ளிக் கொடுத்தவனுக்கு
கிள்ளிக் கொடுக்கூட
ஆளில்லை...

தமிழன் என்றோ
டமிலன் ஆகிவிட்டான்...

பழந்தமிழன்
பகடைக்காயாய்
உருட்டப்படுகிறான்...

பாவப்படவனுக்கு
பரிதாபப்பட
யாரவது உள்ளார்களா?

ஆசை

எல்லோரும்
மழையில் நனைய
ஆசைப்படுவார்கள்.
மழையோ
உன் மேல் நனைய
ஆசைப்படுகிறதே!!!

முத்து

மழைத்துளியின் ஒரு துளி
சிப்பிக்குள் நுழைந்து
முத்து ஆகிறதாம்...
இங்கு ஒரு முத்தே
மழையில் நனைகிறது...
ஒவ்வொரு துளியும்
உன் உறவினர்களா?!!!

மழையானவள்

எதிர்பார்த்து
காத்திருக்கும் என்னை
எதிர்பாராமல் குளிர்விக்கிறாள்....
என்னவள் மழையானவள்!!!