skip to main |
skip to sidebar
மழலை வரம்
கேட்கும்
மடந்தை போல
உன்னைக் காணும்
வரம் கேட்கிறேன்
நான்....
பெண்கள் எப்பொழுதும்
அழகுதான்..
ஏன் என்றால்
பொய் எப்பொழுதும்
அழகாகத்தான் இருக்கும்...
என் வாழ்வில்
நீ அறிமுகம் ஆகும் பொழுது
உன்னை வரவேற்ற துளிகள்
நீ போகும்
இந்நேரம் மட்டும்
ஏன் வழியனுப்ப
மறுக்கின்றன?????
ஒவ்வொரு நொடியும்
பிறக்கின்றோம்...
ஒவ்வொரு நொடியும்
இறக்கின்றோம்...
நீ எனை கடக்கும்
இந்த நொடி
பிறப்பா இறப்பா
தெரியவில்லை...!!!
பார்க்கும் பார்வையும்,
பளிச்சிடும் சிரிப்பும்
அர்த்தம் நூறு தந்தால்
பேசுவதற்கு இடம் எங்கே???
நீ தரும்
வலிகளை விட
நீ பெரும்
வலிகளே
என்னை
வலிக்கச்செய்கின்றன...
என்னை
அழச்செய்கின்றன...