Wednesday, June 30, 2010

வரம்

மழலை வரம்
கேட்கும்
மடந்தை போல
உன்னைக் காணும்
வரம் கேட்கிறேன்
நான்....

பெண்

பெண்கள் எப்பொழுதும்
அழகுதான்..
ஏன் என்றால்
பொய் எப்பொழுதும்
அழகாகத்தான் இருக்கும்...

Tuesday, June 29, 2010

கண்ணீர்

என் வாழ்வில்
நீ அறிமுகம் ஆகும் பொழுது
உன்னை வரவேற்ற துளிகள்
நீ போகும்
இந்நேரம் மட்டும்
ஏன் வழியனுப்ப
மறுக்கின்றன?????

குழப்பம்

ஒவ்வொரு நொடியும்
பிறக்கின்றோம்...
ஒவ்வொரு நொடியும்
இறக்கின்றோம்...
நீ எனை கடக்கும்
இந்த நொடி
பிறப்பா இறப்பா
தெரியவில்லை...!!!

Saturday, June 12, 2010

இடம்

பார்க்கும் பார்வையும்,
பளிச்சிடும் சிரிப்பும்
அர்த்தம் நூறு தந்தால்
பேசுவதற்கு இடம் எங்கே???

Tuesday, June 8, 2010

வலி

நீ தரும்
வலிகளை விட
நீ பெரும்
வலிகளே
என்னை
வலிக்கச்செய்கின்றன...
என்னை
அழச்செய்கின்றன...