Monday, November 26, 2012

கவிதை

மூன்று வார்த்தைகளில்
ஒரு கவிதை
சொல்லமுடியுமா
என்றாய்...

"நீ
நான்
காதல்"
என்றேன்
வியந்து பார்க்கிறாய்...

இது என்ன பிரமாதம்
ஒரு வார்தையில்கூட
கவிதை சொல்வேன்
"நாம்"
என்று...

Thursday, November 8, 2012

வெட்கம்

கைக்குட்டை போல்
கண்ணோடு வைத்திருக்கும
உன் வெட்கத்தை இன்றாவது
சிறை பிடித்திட எண்ணினேன்...
கள்ளச்சிரிப்பை விடுத்து
உதிர்த்த வெட்கத்தை
அள்ளிச்சென்றாய்
வழக்கம்போல் ...