Sunday, March 21, 2010

தொடுவானம்

காத்திருந்து காத்திருந்து
வழித்தடங்கள் மாறி செல்லும்
பயணி அல்ல...

எதை கொடுத்தாலும்
சமாதனம் அடையும்
அழும் குழந்தை அல்ல...

வான் மழை வேண்டி நின்று
வாய்க்கால் நீரை
ஏற்றுக் கொள்ளும்
வயல் அல்ல...

தேடும் போது கிடைக்காத
சொற்களை தவிர்த்து
செல்லும் கவிஞன் அல்ல...

தொடுகிறாய் என்ற நினைவில்
தொடுவாய் என்ற கனவில்
தொடாமல் தொட்டு வாழும்
தொடுவானம் நான்...

No comments: