Friday, September 28, 2012

நீ எங்கேயோ இருக்கிறாய்

எட்டிப்பார்த்து
இம்சிக்கிறாய்

திரும்பிப்பார்த்து
தவிக்கவிடுகிறாய்

கடந்துசென்று
கொல்கிறாய்

சிறு புன்னைகையில்
சிதறடிக்கிறாய்

கண் அசைவில்
கலவரம் செய்கின்றாய்

இவ்வனைத்தையும்
எங்கிருந்தோ செய்யும்
வித்தையை
எங்கிருந்து கற்றாய்...

நீ எங்கேயோ
இருக்கிறாய்..

No comments: