Wednesday, September 26, 2012

வாழ்க்கை

சொந்த ஊருக்கு செல்வதிலேயும்
சென்று வந்தபின்
திரும்ப செல்லும் நாட்களை
கணக்கிடுவதிலேயும்
கழிந்துவிடுகின்றன
வாழ்க்கை...!!!

ஆனாலும்
பேருந்தோ புகைவண்டியோ
பிடிக்க ஓடும் தருணங்களிலும்
திரும்பும் வேளையிலும்
தொண்டையில் ஏற்படும்
சொல்ல முடியாத சோகத்திலும்
கண்ணோரம் வழியும் கண்ணீரிலும்
உணர்கிறேன் வாழ்க்கையின்
ஆனந்தங்களை....!!!

No comments: